Monday, January 8, 2007

கவியகம்

எழுதிவையுங்கள் என்கல்லறையில்
உதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமாஅவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...கலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமாஅவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...உடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்கலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்மறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்உறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்விரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்வெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்பரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்சிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்
எழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...
மதுரகன்